யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் பழைய மாணவிகளின் ஒன்று கூடல் ஒரு சில நாட்களுக்கு முன் நடந்ததுள்ளது.
இந்த ஒன்று கூடலில் அதிக போதை தரும் மதுபாணம் உட்பட பல வகையான மதுபாணங்களும் மாணவிகள் அருந்தி மகிழ்ந்துள்ளதுடன் பொப் இசைக்கு குத்தாட்டம் போட்டும் ஆடியுள்ளனர்.
அங்கு கலந்து கொண்ட பழைய மாணவிகளில் 80 வீதமானவர்கள் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என அறிய முடிகின்றது, இந் நிலையில் அந்த ஒன்று கூடலுக்கு சில மாணவிகள் தமது கணவர்களையும் கொண்டு சென்று மகிழ்ந்துள்ளனர்.
பார்ட்டி உச்ச கட்டத்தில் சென்று கொண்டிருந்த போது சென்ஜோன்ஸ் கல்லுாரியின் பழைய மாணவனான ஒருவர் தனது மனைவிக்குத் தெரியாது அந்த மண்டபத்துடன் கூடிய ஒரு அறைக்குள் பழைய மாணவி ஒருவருடன் கட்டிப் பிடித்து ஆட்டம் போட்டதுடன் தவறான முறையி அன்ரியை தொட்டு மகிழ்ந்து கொண்டிருந்தாராம்.
கணவனைத் காணவில்லை என மனைவி தேடிய போது கணவர் அறை ஒன்றுக்குள் கணவரிலும் வயது கூடிய பழைய மாணவியுடன் முத்தமிட்டு அந்தரங்கமான இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார்.
பத்திரகாளி வேசம் போட்டு கத்தி கூப்பாடு போட்ட மனைவியால் அந்த பார்ட்டியே அன்று அல்லோலகப்பட்டதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணக் கலாச்சாரத்தையும் தமது பாடசாலையின் கண்ணியத்தையும் இங்குள்ள கனடாவில் உள்ள நமது உறவுகள் கட்டிக் காப்பாற்றுவதை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை……