கிளிநொச்சி – புதுமுறிப்பு குளத்தின் பாசன வாய்க்காலில் இருந்து வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, கோணாவில் உள்ள ராஜன் குடியிருப்பைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையான 36 வயதுடைய சத்யராஜ் இவ்வாறு கொல்லப்பட்டது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் வாய்க்காலில் சத்யராஜ் சடலமாக கிடப்பதைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
குறித்த நபர் கொல்லப்பட்டு சடலத்தை புதுமுறிப்பு குளத்தின் கீழ் பாசன கால்வாயில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.