பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை மினுவாங்கோடை பொல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி உரகஹா பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றது மற்றும் நான்கு வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கியால் சுட்ட நபரையும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரையும் கைது செய்ய சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அவரது தந்தை ஒக்டோபர் 19ஆம் திகதி யக்கலமுல்ல பிரதேசத்தில்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த சந்தேக நபர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இருவரும் தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான உரகஹ இந்திக்கவின் உயர்மட்ட உதவியாளர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, போரா 12 ரக துப்பாக்கி மற்றும் ரம்போ கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மினுவாங்கோடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.