வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
போலியான பதிவு முத்திரைகளை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும் போது வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு முத்திரை பொய்யாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் ஓமன் செல்ல முயற்சித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்