ஓமானுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இரண்டு பெண்கள் இலங்கை திரும்பியுள்ளனர்.
இருவரும் இன்று (27-11-2022) அதிகாலை 4.40 மணியளவில் இலங்கை விமானம் மூலம் நாட்டை வந்தடைந்ததாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பான வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரு பெண்களும் தமது உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் பயணச்சீட்டுகளை வாங்கிக்கொண்டு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது