முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மண்டிகை பகுதியில் ஐந்து திருடர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் வந்து வீடு புகுந்து திருட முற்பட்ட போது, வீட்டார் கூச்சலிட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர்.
அதையடுத்து இளைஞர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மாலையில் ஒருவரையும் தற்போது ஒருவரையும் பிடித்துள்ளனர்.
இறுதியாக கைது செய்யப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
எதிர்காலத்தில் திருட்டு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு இவ்வாறான தண்டனைகளை மக்கள் வழங்குவார்கள் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.