போபால்: அரசியலமைப்பை பாதுகாக்க பிரதமர் மோடியை கொல்லுங்கள் என மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜா படேரிய கூறியது
சர்ச்சயகி உள்ளது. அவர்மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ., கட்சியையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அக்கட்சியின் .அக்கட்சியின் தலைவர்கள் சில நேரங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் நோக்கில் சர்ச்சை கருத்துகளையும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியை, ராவணனுடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், மாநில காங்., தலைவருமான ராஜா படேரியா, பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என சர்ச்சையாக பேசியுள்ளார். கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுக அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி சமூகத்தை பிளவுபடுத்துகிறார். அரசியலமைப்பை பாதுகாக்க மோடியை கொல்ல மக்கள் தயாராக இருக்க வேண்டும்’ என பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சயகியுள்ளது.