ஜெல்லி மீன் தாக்கி 4 மாதங்களுக்குப் பிறகு மீனவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 09, 2022 அன்று பண்ணை பகுதியில் இறால் பிடிக்கும் போது ஜெல்லி மீனால் தாக்கப்பட்டார்.
அதன் பின்னர் யாழ்.மருத்துவமனையில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முழுமையாக குணமடையவில்லை.
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை ஜெல்லி மீன்களின் தாக்குதலால் சுகவீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.