200 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை பேருந்து நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் தனியார் பேருந்தின் பயணப்பதிவு
சீட்டில் கையொப்பமிட்டு, பேருந்தை சீராக இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை
செய்து கொடுப்பதற்காக நாளாந்தம் 200 ரூபாவை அவர் கையூட்டலாக பெற்றுள்ளதாக
தெரியவந்துள்ளது.