நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி சென்ற ஸ்ரீ ஏர்லைன்ஸ்
விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று காலை பறந்த இந்த விமானத்தில் மொத்தம் 78 பேர் பயணம் மேற்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றியது.
இது குறித்த அறிகுறிகள் தென்பட்டதும், விமானி விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
உடனடியாக விமானத்தை காத்மாண்டுவில் தரையிறக்கும்படி விமானி அறிவுறுத்தப்பட்டார்.
இதையடுத்து, விமானம் உடனடியாக காத்மாண்டுவில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, விமானத்தில் தீப்பிடிக்கவில்லை என்று கண்டறிந்தனர். ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் 72 பயணிகளுடன் சென்ற ஒரு விமானம்
விபத்தில் சிக்கியதால் தற்போது, விமான அதிகாரிகள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.