மாணவிகள் சிலர் மதுக்கடையில் நிற்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மாணவிகள் அங்கு சென்றதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
பணம் மாற்ற சென்றிருக்கலாம் என சிலர் கூறி வரும் நிலையில், மாணவர்கள் வேறு கடைகளுக்கு சென்று பணம் மாற்றும் வாய்ப்பு இல்லை என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த புகைப்படம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடை ஒன்றின் முன்பாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தை பொறுத்த வரையில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்துள்ளது.
தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி இருபாலரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.
எனவே இம்மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்களிடமும் அந்தந்த பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களிடமும் கேட்டறிந்துள்ளனர்.