அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், சாலையைக் கடந்த சிறுவன் மீது மோதிவிட்டு ஓடியது.
ஏ-9 வீதி நாவக்குழி சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை பிரதேசவாசிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை விபத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நபர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.