யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த மேலும் 3 பேரை தனித்தனியே அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி வலையம் ஒன்றின் அதிகாரியான ஒருவர் மீதே மனைவி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
குறித்த பெண்ணும் அரச அலுவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் மற்றும் காதில் தோடு அணிந்துள்ள மேலும் 3 இளவயதானவர்களுடன் தனது கணவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிள்ளைகள் பாடசாலை சென்ற பின் தானும் அலுவலகம் சென்று விடுவதாகவும் இதன் பின்னர் தனது கணவர் இளைஞர்களை வீட்டுக்கு கொண்டு வந்து இவ்வாறு துஸ்பிரயோகம் செய்வதாகவும் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவரின் கைத் தொலைபேசியை பரிசோதித்த போதே தனக்கு கணவரது இவ்வாறான செயற்பாடு தெரியவந்தது என்றும் அதன் பின்னர் தான் இது தொடர்பாக எச்சரித்த பின்னரும் கணவர் ஓரினச் சேர்க்கையை விடவில்லை எனவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். கைத் தொலைபேசியில் இருந்த குறித்த வீடியோ காட்சிகளில் காணப்படும் இளைஞர்கள் தற்போதும் கணவரிடம் வந்து செல்வதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளர்.
அத்துடன் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற சிசிரிவி காட்சிகளையும் பொலிசாருக்கு கொடுத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.