இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மற்றைய வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் திலியாடியா பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.