எதிர்வரும் காலங்களில் 1 இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றப்பட்ட மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.