இலங்கையிலுள்ள தமிழ் வழிப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் நடைபெற்ற கல்வி அமைச்சர் ஆலோசனைக் குழுவில் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.