தேசிய கீதத்தை சத்தமாக பாடாததனால் பள்ளி மாணவர் ஒருவர் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளார்.
அவிசாவல ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் மாணவர்கள் தேசிய கீதத்தை பாடிக்கொண்டிருந்த போது ஆசிரியர் ஒருவர் சத்தமாக பாடுமாறு கூறி அவரை தலையில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த ஆசிரியரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.