நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு கிடைப்பதில்லை என்பதை அமைச்சர் முன்னதாக பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
இதன்காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மதிய உணவு திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.