பொல்துவ சந்தியில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையில் ஈடுபட்ட பலரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் மேல் மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 23 சந்தேகநபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், அநாகரீகமாக நடந்துகொண்டபோதும் வீடியோ காட்சிகளில் படம்பிடிக்கப்பட்டவர்களின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தாள உடனடியாக கீழ் உள்ள தொடர்பு எண்களுக்கு தெரியபடுத்துமறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0112 829 388
071 30 64 165
071 85 92 209