வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியாவிற்குள் நுழைய முயன்றவர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் கிராம அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.