முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செயதுவரும் தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கருநாட்டுக்கேணி கடற்கரைப்பகுதியில் நேற்று கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை இழுத்து செல்லப்பட்டு கடற்றொழிலாளர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது 23 அகவையுடைய மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த கடற்தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
கடற்றொழிலாளரின் சடலம் இன்று ( 30.10.22) கொக்குளாய் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
சடலத்தினை மீட்ட கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.