Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது நாய் இடையில் வந்ததால் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பலி!

மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது நாய் இடையில் வந்ததால் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பலி!

பொலிஸ் மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பனமுர பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று திங்கட்கிழமை இரவு சுற்றிவளைப்புக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் நாய் ஒன்று ஓடியதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பனாமுர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments