அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவின் விலை குறையலாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய காலகட்டத்தில் 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், நுகர்வோரின் நலன் கருதி 250 ரூபாவினால் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.