கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக தற்காலிகமாக கடமையாற்றிய பிரியந்தினி கமலாசிங்கம் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அவசர இடமாற்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியர் நாளை முதல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இணைக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இன்று அவர் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தங்கியிருக்குமாறு கோரி அவருக்கு ஆதரவாக சிலரை வலுக்கட்டாயமாக திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், எமக்குக் கிடைத்த தகவலின்படி, தற்போது கிளிநொச்சியில் கடமையாற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேர்மையானவர் எனவும், மக்களின் நலன் கருதி சேவையாற்றக் கூடியவர் எனவும் நம்புகின்றோம்.