தொலைபேசியில் ஏற்பட்ட தகராறு காரணமாக தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தருமராசா தவசீலன் என்ற 37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.