Tuesday, May 14, 2024
Homeஇலங்கை செய்திகள்அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரத்தில் இடம்பெற்ற கொடூரம்!

அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரத்தில் இடம்பெற்ற கொடூரம்!

தொலைபேசியில் ஏற்பட்ட தகராறு காரணமாக தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தருமராசா தவசீலன் என்ற 37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments