Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்அனுராதபுரம் பிரதேசத்தில் பாடசாலைக்குள் நுழைந்த நபர்கள்; மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

அனுராதபுரம் பிரதேசத்தில் பாடசாலைக்குள் நுழைந்த நபர்கள்; மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

வெளியாட்கள் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று (11) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் நேற்று மேலதிக வகுப்பு நடத்திக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே வகுப்பில் இருந்த இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் இருவரும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments