ஆளுநரை அவதூறாக பேசிய புகாரில் திமுக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் வழக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது சர்ச்சையானது.
இதுகுறித்து, வீடியோ ஆதாரத்துடன் ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் விளைவித்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.