Monday, May 6, 2024
Homeஇலங்கை செய்திகள்இத்தாலிக்கு ஆட்கடத்தும் கும்பல் - இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இத்தாலிக்கு ஆட்கடத்தும் கும்பல் – இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

லெபனான் ஊடாக படகு மூலம் இத்தாலிக்கு இலங்கையர்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இலங்கையர்களை சட்டவிரோதமாக இத்தாலிக்கு கடத்துவது தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆபத்தான பயணம் குறித்து லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக பணியகம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான மனித கடத்தல் கும்பலுக்கு இரையாகி தமது உயிரை பணயம் வைத்து பணத்தை வீணடிக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மனித கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கமான 1989 அல்லது பணியக விசாரணைப் பிரிவின் 0112864214 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments