டாக்டர் அப்துல்கலாம் பவுண்டேஷன், மார்டின் பவுண்டேஷன் ஸ்பேஸ் zone இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து ஹைப்ரிட் ராக்கெட்டை தயாரித்தனர். 6 முதல் 12வகுப்பு வரையுள்ள 5ஆயிரம் மாணவர்கள் இணைந்து 150 சிறிய pico ரக செயற்கைக்கோள்களை உருவாக்கினர். இதில் 2ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்களும் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களும், ஹைப்ரிட் ராக்கெட் மூலம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.