கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த போது அவரது மனைவியின் அழகு நிலையத்திற்கு 19 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுகும்புர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் காரணமாக உள்ளக கணக்காய்வு அறிக்கையில் 400 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, அழகு நிலையத்தில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை கூட செலுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.