நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையின் அனுமதி
அறிக்கையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில்
கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எனக்கு நிரந்தர வதிவிற்காக அல்லது நீண்ட நாட்களுக்கு கூட நாட்டை விட்டு செல்ல
எந்த திட்டமும் இல்லை. நானும் எனது குடும்பமும் இலங்கையில் இருக்கிறோம். நாட்டை விட்டு செல்வதில் நம்பிக்கை இல்லை.” என்றார் அவர்.