Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்ஐரோப்பாவிற்குள் சட்டவிரோத புலம்பெயர் விவகாரம் - 14 இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை.

ஐரோப்பாவிற்குள் சட்டவிரோத புலம்பெயர் விவகாரம் – 14 இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை.

வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டனர்.

அதேவேளை, பாரிஸுக்கு வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் இருந்து இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டில் 45,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவிற்குள் நுழைந்ததாகவும், இது முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments