சிறிலங்காவின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறுவதால், அதனை எதிர்த்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்படும் வரை சிறிலங்காவின் சுதந்திர தினம்,
தமிழர் தாயக மக்களுக்கு கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகப் பகுதியில் கடந்த 4 ஆம் திகதி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய போராட்டம் தொடர்ச்சியாக ந4 நாட்களாக முன்னெடுக்கப்பட்டது.