எமது நாட்டின் மீதுள்ள வெறுப்பினால் நாங்கள் வேறு நாட்டிற்கு செல்லவில்லை, எமது பிள்ளைகளும் குடும்பமும் நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் வேறு நாட்டிற்கு சென்றோம் என இந்தியாவின் பெங்களூரு சிறையில் உள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள ஏஜென்ட்களால் 38 ஆண்கள் ஏமாற்றப்பட்டு கனடாவுக்குச் செல்ல முயன்றனர். அதுமட்டுமல்லாது கனடா செல்ல முயற்சிப்பதாக குறித்த முகவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, 38 பேரும் பெங்களூரு சிறையில் சுமார் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்கள் தவறை மன்னித்து நாட்டுக்கு அழைத்து வருமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய சிறையில் உள்ள ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் நாட்டை வெறுக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு நாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்றோம். எனவே ஒரு முகவர் எங்களை கனடாவுக்கு அனுப்புவதாகச் சொல்லி இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.
இந்தியா வரும் வரை எங்கிருக்கிறோம் என்றே தெரியாது. எங்களை இங்கு வரவழைத்தது மட்டுமல்லாமல் அந்த முகவரியை அதிகாரிகளிடம் காட்டி சிறையில் அடைத்தார்.
2021 6 வது மாதத்திலிருந்து நாங்கள் இங்கு சிறையில் இருக்கிறோம். எங்களுக்கு சரியான உணவு இல்லை. எங்களின் பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.
இரண்டு மாதத்தில் நாட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று வந்த நாட்களில் இருந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் இன்னும் பலன் இல்லை.
எனவே நாங்கள் எங்கள் நாட்டு அதிகாரிகளிடம் மன்றாடுகிறோம். தயவுசெய்து எங்களை நாட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் யாரிடம் பேசச் சொன்னாலும் நாங்கள் பேசுகிறோம். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்,” என்றார்.