Thursday, May 16, 2024
Homeஇந்திய செய்திகள்கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்யாகுமரி மாவட்டத்தில் 24.12.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்யாகுமரி மாவட்டத்தில் 24.12.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து பிறப்பை கிறிஸ்துமஸ் (Christmas) என்று ஆண்டுதோறும் உலக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, 12 நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாக இருந்து வருகிறது.

மேலும், கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்துவதாகவும் இருந்து வருகிறது.

இந்த கொண்டாட்டம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி, அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கிறது. அதன்படி, டிசம்பர் 25 முதல் நாளாக பல இடங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி, பன்னிரண்டாவது நாள் கொண்டாட்டம் நிறைவடைகிறது.

இந்த ஆண்டும் வழக்கம்போல கிறிஸ்துமஸ் பண்டிகை இம்மாதம் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments