குறைந்த வருமானம் பெறுவோருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான 5000 ரூபாய் குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி பகுதிகளில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், இந்த கொடுப்பனவு தொடர்ந்து வழங்கப்படுகிறது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு இந்தக் கொடுப்பனவுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.