இந்தியாவை பொருத்தவரை கொரோனாவை எதிர்கொள்ள இரண்டாவது பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ளும் தேவையில்லை என ANI அளித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் நோக்கமும் மக்கள் முதல் ஊசியை வெற்றிகரமாக அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே. அப்படி இந்தியாவில் 90% மக்கள் தடுப்பூசி செலுத்தியதால் சீனாவைப் போல் இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிமாக இல்லை.
அதனால்தான் இப்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வகை தொற்றின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.
Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டதே கொரோனா தாக்கம் குறைந்ததற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் மக்கள் தடுப்பூசி செலுத்த செலுத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தது. எனவேதான் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த வரிசையில் இந்தியாவும் களம் இறங்கி வெற்றி கண்டது. எனவே தான் ஆராய்ச்சி குழு உருமாறும் கொரோனாவுக்கு எதிராக போராட பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரித்துக்கொண்டிருக்கிறது.