இந்த நாட்களில் காய்ச்சல் மற்றும் ஏனைய வைரஸ் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் டாக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால், இந்த வைரஸ் நிலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.