Tuesday, May 14, 2024
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் சேவை பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான தொடருந்து சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments