அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு அடிமையானவர்களின் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்ட சிலரின் புகைப்படங்களை பிலியந்தலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.