இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சீனாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.