Friday, May 3, 2024
Homeஇலங்கை செய்திகள்சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் பலி!

சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் பலி!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 10 மாவட்டங்களில், 3 ஆயிரத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 8 வீடுகள் முழுமையாகவும் 347 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments