தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதையடுத்து, பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்றைய தினம் (23.02.2023) அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.