Saturday, May 18, 2024
Homeஇந்திய செய்திகள்தஞ்சாவூரில் இப்படி ஒரு இடம் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?காதலர்களுக்கு மரியாதை தரும் கஃபே..!

தஞ்சாவூரில் இப்படி ஒரு இடம் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?காதலர்களுக்கு மரியாதை தரும் கஃபே..!

உங்களோட காதலரோடையும் நண்பர்களோடயும் சூப்பராவே டைம் ஸ்பென்ட் பண்ற இடம் தான் இது. காதலர்களுக்கே அம்பு விட்டு அவங்களோட நினைவுகளை அங்கேயே ஃபீரீஸ் பன்ற தஞ்சாவூரில் உள்ள இந்த கீயூப்பிட்ஸ் கார்னர் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா…

தஞ்சையை சேர்ந்த நண்பர்களான பிராபாகரன் வீரராஜ் மற்றும் நிஷாந்த் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலுக்கு ஒரு கெஃபே (சிற்றுண்டி உணவகம்) திறக்கனும் என்ற எண்ணத்தில் இந்த கடையை திறந்து அதில் காதலர்களை கவரும் வகையில் பல லவ் சிம்பிள்ஸ்களோட வண்ணமயமாக செதுக்கியிருக்காங்க.

இதுல ரொம்பவே முக்கியமான ஒரு விஷயம் என்னென்னா காதலுக்கு பெயர் போன பாரிஸ் நகரத்தில் காதலர்கள் தங்கள் அன்பை வெளிபடுத்தும் லவ் லாக் மேட்டர இவங்க இங்க கொண்டு வந்துருக்காங்க. இங்க உள்ள பூட்டுகள்ல இங்கு வரும் லவ்வர்ஸ், ப்ரண்ட்ஸ் எல்லாறும் அவங்களோட காதல், பூட்டு போல எப்பவுமே லாக்லதான் இருக்கும் என்கிற உண்ணதத்தை உணர்தும் விதமா இப்படி சூப்பர் மேட்டர செஞ்சிருக்காங்க .

இங்க வர்ரவங்கலாம் அவங்க பெயரை எழுதிவிட்டு சாவியை எடுத்தும் செல்லலாம். இங்கேயும் கொடுக்கலாம், இந்த கெஃபேலயே நெறைய சாவி இருக்குறதுநாள எந்த சாவி எந்த பூட்டுக்குண்ணே தெரியாத அளவில் இருக்குமாம்… அது மட்டுமல்லாம இங்க வருபவர்கள் அவர்களுடைய நினைவுகளை பதிவு செய்யும் விதமாவும், இந்த கெஃபே – பற்றிய ரிவீவ்ஸ் பற்றியும் இந்த காகிதத்துல பதிவு பண்ணலாம்.

இந்த கேஃபே க்கு லவ்வர்ஸ் மட்டும் இல்லாம ப்ரண்ட்ஸ் ஃபேமிலி னு எல்லாரும் வருவாங்கலாம். காதலர்களுக்கே அம்பு விட்டு அவங்களோட நினைவுக அப்டீயே லாக் பன்ற இந்த கெஃபே தஞ்சையில் பலர் கவனிக்கும் இடமாக மாறி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் நிர்மலா நகர் பகுதியில் க்யூபிட்ஸ் கார்னரில் இந்தக் கடை அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments