Friday, May 17, 2024
Homeஇந்திய செய்திகள்தஞ்சை மாவட்டத்தில் நாளை மின் தடை !!!எந்தெந்த பகுதிகளில் மின் தடை என தெளிவாக இங்கே...

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின் தடை !!!எந்தெந்த பகுதிகளில் மின் தடை என தெளிவாக இங்கே காணலாம் ….

தஞ்சாவூரில் நகர துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்கே நாளை (03-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

கீழவாசல் மின்பாதையில் உள்ள பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ஓட்டக்கார தெரு, பெரிய குரும்பர் தெரு, சாமியாபிள்ளை தெரு, சுண்ணாம்புகார தெரு, பெரிய அரிசிக்கார தெரு, ஜெபமாலை மாதாகோவில் தெரு, எஸ்.என்.எம்.நகர், குறிச்சி புதுத்தெரு, டபீர்குளம் ரோடு, தாஸ்தப்பா நாயக்கன் தெரு, குறிஞ்சி சுப்பிரமணியர் கோவில்தெரு, திரவுபதியம்மன்கோவில் தெரு, அம்மா தோட்டம், காசிம் நகர் மற்றும் ரிஜிஸ்டர் ஆபீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மேலும், மின் தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு  செயற்பொறியாளர் கருப்பையா கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments