15 வயதுடைய மாணவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பாடசாலையின் விடுதியில் பயின்று வந்த மாணவி விடுதிக்கு அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவி கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) மாலை கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற மாணவி கிணற்றில் விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.