Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்திருமணமான மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி - மனைவியின் அதிரடி நடவடிக்கை.

திருமணமான மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி – மனைவியின் அதிரடி நடவடிக்கை.

கம்பளை பிரதேசத்தில் திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் பயணத்தின் போது திருமண பந்தமே முடிவுக்கு வந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம் முடிந்து மணமகளுடன் வீட்டுக்கு வந்த மணமகன், நண்பருடன் சேர்ந்து பியர் குடித்ததால் கோபமடைந்த மனைவி கணவரை கொடூரமாக தாக்கி, காதை கடித்து துண்டாக்கியதுடன், உடலிலும் கீறியுள்ளார்.

இந்த ஜோடி 7 வருட காதலின் பின்னர் திருணம் செய்துக் கொண்டுள்ளதாக கம்பளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவி கம்பளையில் வசிப்பவராகும். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். கணவர் கலத பிரதேசத்தை சேர்ந்தவராகும். இவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.

கடந்த 5 நாட்களுக்கு முன் பெரும் பொருட்செலவில் இருவருக்கும் திருமணம் நடந்தது. புகைப்பட கலைஞருக்கு மாத்திரம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் தேனிலவுக்குப் பிறகு இருவரும் கணவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு கணவர் தனது மணமகனின் நண்பரை சந்தித்து இருவரும் பியர் குடித்துள்ளனர். இதனால் கணவர் வீட்டிற்குள் வர அரை மணி நேரம் தாமதமாகியுள்ளது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மனைவி வீட்டுக்கு வந்த கணவரை திட்டி, தாக்க ஆரம்பித்துள்ளார். இரத்தம் வழியும் வரை அவன் காதைக் கடித்துவிட்டு, அவரது உடலையும் தன் நகத்தால் கீறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments