Sunday, April 28, 2024
Homeஇலங்கை செய்திகள்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தந்தை !

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தந்தை !

புத்தளம் கடையகுளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்டவர் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் புத்தளம் கடையகுளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புத்தளம் கற்பிட்டி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments