மதுரை யில் நகை சீட்டு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் 10 லட்சம் வரை ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மேலமாசி வீதியில் ஶ்ரீ சுபம் ஜீவல்லரி எனும் பெயரில் கார்த்திக் (45) என்பவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் இவர் துவங்கிய நகைச்சீட்டு திட்டத்தின் மூலம், நகைக்கான தொகைக்கு ஏற்ப மாதம்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் நகை பெற்று வந்துள்ளனர்.
இந்த நகைச்சீட்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கான திட்டத்தில் 10 மாதங்களுக்கான தொகையை மட்டும் வாடிக்கையாளர் செலுத்தினால் போதும் மீதமுள்ள இரண்டு மாத தொகைகையை செலுத்தாமலேயே நகையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய சலுகையை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். மேலும், பணத்துக்கு பதிலாக பழையை நகைகளை கொடுத்தும் புதிய நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.