நாட்டில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,171 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று முன்தினமும் 5 பேர் கொரொனா தொற்றாளர்களாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.